நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகிராமன், 34. இவர், நேற்று, மேலவலம்பேட்டையில் உள்ள குளோபல் கார்மெண்ட்ஸ் கம்பெனி எதிரே, இவருக்கு சொந்தமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, வேலைக்கு சென்றுள்ளார்.
மாலை 6:30 மணி அளவில் வந்து பார்த்தபோது, பைக் மாயமானது. இதுகுறித்து மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மதுராந்தகம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.