/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாஜி எம்.பி., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
/
மாஜி எம்.பி., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 09, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, முன்னாள் எம்.பி.,யும், சமீபத்தில் தி.மு.க.,வில் சேர்ந்தவருமான மைத்ரேயன் வீடு மற்றும் அலுவலகம், பெசன்ட் நகர் முதல் அவென்யூவில் உள்ளது.
இந்த வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக, நேற்று டி.ஜி.பி., அலுவலகத்திற்கு இ - மெயில் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் அவரது வீட்டை தீவிரமாக சோதனை செய்தனர்.
ஒரு மணி நேரம் மேற்கொண்ட சோதனையில், மிரட்டல் புரளி என தெரிந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் ஐ.டி.,யை பயன்படுத்தி, அவர் யார் என, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.