/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளியாற்றில் மாயமான சிறுவன் 3 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
/
கிளியாற்றில் மாயமான சிறுவன் 3 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
கிளியாற்றில் மாயமான சிறுவன் 3 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
கிளியாற்றில் மாயமான சிறுவன் 3 நாளுக்கு பின் சடலமாக மீட்பு
ADDED : டிச 19, 2024 12:20 AM

மதுராந்தகம்,:மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் புவனேஷ்வரன், 17.
மதுராந்தகம், ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
கடந்த 15ம் தேதி காலை, நண்பர்களுடன் மதுராந்தகம் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் கலங்கல் பகுதியில் குளித்த போது, புவனேஷ்வரன் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
மதுராந்தகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், மூன்று நாட்களாக இரவு, பகலாக சிறுவனை தீவிரமாக தேடினர்.
இந்நிலையில் நேற்று காலை, ஏரியிலிருந்து கலங்கல் வழியாக தண்ணீர் செல்லும் பகுதியில், புவனேஷ்வரன் உடல் மிதந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போராட்டம்
இந்நிலையில், புவனேஷ்வரன் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கோரி, மதுராந்தகம் நீர்ப்பாசன துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன், அவர்களிடம் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

