sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலை விபத்தில் கொத்தனார் பலி

/

சாலை விபத்தில் கொத்தனார் பலி

சாலை விபத்தில் கொத்தனார் பலி

சாலை விபத்தில் கொத்தனார் பலி


ADDED : ஜூன் 24, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூன் 24, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே, ஸ்கூட்டரில் வேன் மோதி கொத்தனார் பலியானார்.

செங்கல்பட்டு அடுத்த பொன்விளைந்தகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு, 55.

மறைமலை நகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியில், கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு, தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் சென்றார். சிங்கபெருமாள் கோவில் -- மருதேரி சாலையில் மெல்ரோசாபுரம் சந்திப்பில் வந்தபோது, 'டிராயாம்ப்' தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பின்னால் வந்த 'எய்ச்சர் டூரிஸ்டர்' வாகனம், இவரது ஸ்கூட்டரில் மோதியது.

இதில் அன்பு படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், அன்பு உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு, வேன் ஓட்டுநரான காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருங்குழி பகுதியைச் ஆறுமுகம், 35, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us