sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பஸ் சக்கரத்தில் புகுந்த நாய்க்குட்டி காப்பாற்றிய நடத்துநருக்கு பாராட்டு

/

பஸ் சக்கரத்தில் புகுந்த நாய்க்குட்டி காப்பாற்றிய நடத்துநருக்கு பாராட்டு

பஸ் சக்கரத்தில் புகுந்த நாய்க்குட்டி காப்பாற்றிய நடத்துநருக்கு பாராட்டு

பஸ் சக்கரத்தில் புகுந்த நாய்க்குட்டி காப்பாற்றிய நடத்துநருக்கு பாராட்டு


ADDED : அக் 31, 2025 11:41 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், கொளத்துார் -- தி.நகர், தடம் எண் 'எம்51வி' என்ற பேருந்து, மாம்பாக்கம் வழியாக சென்றது.

அப்பேருந்து நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, மாம்பாக்கம் சிவன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நின்று, மீண்டும் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது, பேருந்து சக்கரத்தின் அடியில், நாய்க்குட்டி ஒன்று திடீரென வந்தது. ஓட்டுநர் பேருந்தை இயக்க முயற்சித்த நேரத்தில், நாய்க்குட்டி சக்கரத்தில் சிக்கியதை அறிந்த நடத்துநர் பாபு, 50, என்பவர், உடனே பேருந்து நிறுத்தும்படி ஓட்டுநரிடம் கூறி, கீழே இறங்கினார்.

பின், சக்கரம் அடியில் இருந்த நாய்க்குட்டியை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விட்டார்.

நாய்க்குட்டியின் உயிரை காப்பாற்றிய நடத்துநரை, பயணியர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us