sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தறிகெட்டு ஓடிய காரால் விபத்து காயத்துடன் தப்பிய வியாபாரி

/

தறிகெட்டு ஓடிய காரால் விபத்து காயத்துடன் தப்பிய வியாபாரி

தறிகெட்டு ஓடிய காரால் விபத்து காயத்துடன் தப்பிய வியாபாரி

தறிகெட்டு ஓடிய காரால் விபத்து காயத்துடன் தப்பிய வியாபாரி


ADDED : ஜூலை 21, 2025 02:03 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:ஆப்பூர் அருகே தண்ணீர் கேன் வியாபாரி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பு, மின்கம்பங்களில் மோதி விபத்தில் சிக்கியது.

சிங்கபெருமாள் கோவிலை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வினோத், 36. அதே பகுதியில், வீடுகளுக்கு தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகின்றார்.

நேற்று காலை, சிங்கபெருமாள் கோவிலில் இருந்து, சேந்தமங்கலம் நோக்கி, தன் மாருதி காரில் வினோத் சென்று கொண்டிருந்தார். சிங்கபெருமாள் கோவில்,- ஸ்ரீ பெரும்புதுார் சாலையில், ஆப்பூர் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓர தடுப்பு மற்றும் மின் கம்பத்தில் மோதி, அருகில் மரம், செடிகள் நிறைந்த பகுதிக்குள் புகுந்தது.

வலது கையில் காயமடைந்த வினோத்தை, அங்கிருந்தோர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விபத்து குறித்து, பாலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us