sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புயலால் நடைபாதை கூரை சேதம் மீண்டும் ஓடுகள் அமைக்கப்படுமா?

/

புயலால் நடைபாதை கூரை சேதம் மீண்டும் ஓடுகள் அமைக்கப்படுமா?

புயலால் நடைபாதை கூரை சேதம் மீண்டும் ஓடுகள் அமைக்கப்படுமா?

புயலால் நடைபாதை கூரை சேதம் மீண்டும் ஓடுகள் அமைக்கப்படுமா?


ADDED : பிப் 25, 2024 01:24 AM

Google News

ADDED : பிப் 25, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் மார்வர் அரசினர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்து ஏற்பட்டது.

இதை தவிர்க்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இது, கடந்த 2022ம் ஆண்டு 'மாண்டஸ்' புயலின் காரணமாக சேதமடைந்தது.

இதன், மேற்கூரையில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஓடுகள் உடைந்து, விபத்து ஏற்படும் வகையில் காற்றில் ஊசலாடி கொண்டிருந்தன.

இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடனேயே இப்பகுதியை கடந்து சென்றனர். அதன்பின், 2023ல் இரும்பு நடைபாதை மேற்கூரையின் மீது அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஓடுகள் அகற்றப்பட்டன.

மேற்கூரை அகற்றப்பட்டு ஓராண்டாகியும், இதுவரை மீண்டும் மேற்கூரை அமைக்கப்படாமல் திறந்தவெளியில் உள்ளது. கோடைகாலம் வருவதையொட்டி, வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும்.

எனவே, புதிதாக மேற்கூரைகள் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us