/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
/
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : மே 31, 2025 03:38 AM

சென்னை:தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து, சில தினங்களுக்கு முன் விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில் வந்திருந்த பயணியரின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அங்கு சுற்றுலா சென்று திரும்பிய, சென்னை பயணியின் லக்கேஜ்ஜில் என்ன உள்ளது என கேட்டதற்கு, வீட்டிற்கு தேவையான உணவு பொருள் என தெரிவித்துள்ளார்.
அதை ஏற்க மறுத்த அதிகாரிகள், லக்கேஜை பிரித்து பார்த்ததில் உயர்ரக கஞ்சா 5 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 5 கோடி ரூபாய்.
அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். கடந்த சில தினங்களில் மட்டும், 6 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், கடந்த சில மாதங்களாக கடத்தல் குறித்த எந்த விபரங்களையும் வெளியிடுவதில்லை. விமான நிலைய முதன்மை கமிஷனர் தமிழ்வளவன் இது குறித்து கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது.