
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூவத்துார்: கூவத்துாரில் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் மீது கார் மோதி உயிரிழந்தார்.
திருக்கழுக்குன்றம் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அழகேசன் 50; கூவத்துார் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை 4:30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் பேஷன்ப்ரோ இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற 'இனோவா' கார் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அழகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கூவத்துார் போலீசார் வழக்குப்பதிந்து, அழகேசன் உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

