sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மருத்துவமனைகளை பராமரிக்க மத்திய குழுவினர் 'அட்வைஸ்'

/

மருத்துவமனைகளை பராமரிக்க மத்திய குழுவினர் 'அட்வைஸ்'

மருத்துவமனைகளை பராமரிக்க மத்திய குழுவினர் 'அட்வைஸ்'

மருத்துவமனைகளை பராமரிக்க மத்திய குழுவினர் 'அட்வைஸ்'


ADDED : அக் 30, 2025 10:03 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை முறையாக பராமரிக்க வேண்டுமென, மத்திய குழுவினர் அறிவுறுத்தினர்.

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், மேம்படுத்தப்பட்ட வட்டார ஆரம்ப சுகாதார மையம் இயங்குகிறது.

மத்திய சுகாதாரம், குடும்ப நல மண்டல இயக்குநர் நிர்மல்ஜோ தலைமையிலான குழுவினர், மாவட்ட சுகாதார அலுவலர் பானுமதியுடன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

இம்மையத்தில் சிகிச்சை பெறும் புறநோயாளிகள் எண்ணிக்கை, முக்கிய மருந்துகள் உள்ளிட்டவற்றின் இருப்பு ஆகியவற்றை பரிசோதித்து, மகப்பேறு பிரிவை பார்வையிட்டனர்.

அங்கு சிகிச்சை பெற வந்தவர்களிடம், மையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

சுகாதார மைய வளாக பகுதி முறையான பராமரிப்பின்றி இருப்பதையும், புதிய கழிப்பறை பயன்படுத்தப்படாமல் உள்ளதையும் கண்டு அதிருப்தியடைந்த அவர்கள், துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினர்.

மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பகுதி அரசு மருத்துவமனைகளிலும், வெவ்வேறு குழுவாக ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us