ADDED : மார் 22, 2026 10:06 PM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில், பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் தீபிகா, 24. நேற்று முன்தினம் இரவு, முகத்தை கைகுட்டையால் மறைத்தபடி வந்த நபர், தீபிகா அணிந்திருந்த 8 சவரன் செயினை பறித்தார்.
செயினை தீபிகா இழுத்து பிடித்ததால், செயின் அறுந்து சிறிய பகுதியை பறித்து விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், அகதிகள் முகாமை சேர்ந்த பரத், 24, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
