/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
செங்கை அரசு கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : அக் 25, 2025 10:41 PM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் 1,870 மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர்.
செங்கல்பட்டு நகர பகுதியில் ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியில் 3,700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர். 2022- 23ம் ஆண்டு பயின்ற மாணவ -- மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நெம்மேலி பகுதியில் கோகுலம் பள்ளி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் சண்முகவள்ளி தலைமை வகித்தார். உயர்கல்வி துறை அமைச்சர் செழியன், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் பங்கேற்று 1,870 மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ- - மாணவியர் பெற்றோர் பங்கேற்றனர்.

