sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நிறுத்தம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

/

செங்கை ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நிறுத்தம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

செங்கை ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நிறுத்தம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்

செங்கை ஜி.எஸ்.டி., சாலையில் வாகன நிறுத்தம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்


ADDED : ஜன 31, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலை, நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை - ஒருங்கிணைந்த நீதிமன்றம் வரை, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இணைப்பு சாலையை ஆக்கிரமித்து, இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

இவ்வழியாக, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சப்- கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.

இதனால், பாதாசரிகள் சாலையின் மையப்பகுதியில், விபத்து ஆபத்துடன் செல்கின்றனர். இப்பகுதியில், அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து, நுாறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இணைப்பு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இச்சாலையில், விபத்துக்கள் நடப்பதற்குள், சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us