/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு
/
குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 12, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நடந்தது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் தலைமையில், அனைத்துறை அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில், மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.