/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநகர பஸ் நடத்துனர் ரயில் மோதி பலி
/
மாநகர பஸ் நடத்துனர் ரயில் மோதி பலி
ADDED : ஜூன் 20, 2025 08:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் ரகுமான், 50. தாம்பரம் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல வேலைக்குச் செல்வதற்காக, மறைமலை நகரில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.
அப்போது, புறநகர் மின்சார ரயில் ரகுமான் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், ரகுமான் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.