sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வரிசைகட்டி செல்லும் மாநகர பஸ்கள் மறைமலை நகரில் பயணியர் தவிப்பு

/

வரிசைகட்டி செல்லும் மாநகர பஸ்கள் மறைமலை நகரில் பயணியர் தவிப்பு

வரிசைகட்டி செல்லும் மாநகர பஸ்கள் மறைமலை நகரில் பயணியர் தவிப்பு

வரிசைகட்டி செல்லும் மாநகர பஸ்கள் மறைமலை நகரில் பயணியர் தவிப்பு


ADDED : ஜூன் 01, 2025 08:55 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் என்.ஹெச்- -2 எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு தடம் எண் 118 பேருந்து 16 முறை இயக்கப்படுகிறது.

இதே பேருந்து கலிவந்தப்பட்டு - தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு, மறைமலை நகர் வழியாக 12 முறையும் இயக்கப்படுகிறது.

மறைமலை நகர் - தாம்பரம் வழித்தடத்தில், தடம் எண் '118ஆர்' பேருந்து வார நாட்களில் மட்டும், நாள் ஒன்றுக்கு 14 முறை இயக்கப்படுகிறது.

இந்த பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் தாமதமாக வருவதால், பயணியர் சிரமப்படுகின்றனர். மேலும், பல நேரங்களில், இந்த பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து வருவதால், சிறிது நேரம் கழித்து மீண்டும் பேருந்துகள் வராமல், பயணியர் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், பேருந்துகளை சரியான நேர இடைவெளியில் இயக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:

மறைமலை நகர் பகுதியில் உள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து மாநகர பேருந்து தாம்பரம், பிராட்வே, தி.நகர் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டது.

கொரானோ காலங்களில் அனைத்து பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. மீண்டும் பேருந்துகள் இயக்கும் போது பிராட்வே, தி.நகர் தடத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டு, தாம்பரம் வரை செல்லும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

பேருந்து பற்றாக்குறையாக இருப்பதால் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், வேலைக்கு செல்லும் பெண்கள் என, அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் பேருந்தை தவற விட்டால், ஒரு கி.மீ., துாரம் நடந்து சென்று, ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்து பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்போது இந்த பகுதியில் வீடுகள், தொழிற்சாலைகள் அதிகரித்து உள்ளதை கருத்தில் கொண்டு, மீண்டும் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகர பேருந்துகள் மதிய நேரத்தில் அடுத்தடுத்து வரிசையில் வருகின்றன. அதன் பின், 40 நிமிடங்கள் வரை பேருந்து வருவதில்லை. இதனால் பயணியர் அவதியடைந்து வருகின்றனர். எனவே பேருந்துகளின் நேரத்தை ஒழுங்குபடுத்த, மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.பரணி, மறைமலை நகர்.






      Dinamalar
      Follow us