/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 நாள் வேலை வழங்க மறுப்பு தொன்னாடு ஊராட்சி செயலர் மீது புகார்
/
100 நாள் வேலை வழங்க மறுப்பு தொன்னாடு ஊராட்சி செயலர் மீது புகார்
100 நாள் வேலை வழங்க மறுப்பு தொன்னாடு ஊராட்சி செயலர் மீது புகார்
100 நாள் வேலை வழங்க மறுப்பு தொன்னாடு ஊராட்சி செயலர் மீது புகார்
ADDED : செப் 28, 2024 04:20 AM

மதுராந்தகம், : மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு தொன்னாடு ஊராட்சி உள்ளது. மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ், குளம் வெட்டும் பணி நடந்துவருகிறது.
இந்தப் பணிக்கு, 100 நாள் வேலை திட்ட அட்டை வைத்துள்ள பணியாளர்கள்நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளனர்.
அந்த பணியாளர்களிடம், வீட்டுவரி செலுத்தாமல் வேலைக்கு வந்ததாகக் கூறி, 15க்கும் மேற்பட்டோரை, ஊராட்சி செயலர் மற்றும் பணித்தள பொறுப்பாளர் திருப்பி அனுப்பி உள்ளனர்.
அதனால், பாதிக்கப்பட்ட மக்கள்,100 நாள் வேலை வழங்கக்கோரி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளரிடம் புகார் மனுஅளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதுகுறித்து,சிவகாமி, 45,என்பவர்கூறிய தாவது:
வீட்டுவரி செலுத்தாத மக்களுக்கு, 100 நாள் வேலை வழங்க முடியாது என்ற ஊராட்சி செயலர், 15க்கும் மேற்பட்ட நபர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்பிவிட்டார்.
ரசீது வழங்கவில்லை
வீட்டு வரிக்கான பணத்தை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் ஊராட்சி செயலர் பெற்றுக் கொண்டார். ஆனால், பணத்தை செலுத்தியதற்கான ரசீதை இதுவரைஎங்களுக்கு வழங்கவில்லை.
வீட்டுவரி பணத்தை செலுத்தாமல், 100 நாள் வேலைதிட்டத்தில் பணி வழங்க முடியாதுஎன எங்களைவஞ்சிக்கிறார்.
எனவே, தொடர்ந்து மக்களை வஞ்சித்து வரும் ஊராட்சிசெயலரை, வேறு இடத்திற்கு பணிமாறுதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.