sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'காப்பர்' ஒயர் திருடியவர் கைது

/

'காப்பர்' ஒயர் திருடியவர் கைது

'காப்பர்' ஒயர் திருடியவர் கைது

'காப்பர்' ஒயர் திருடியவர் கைது


ADDED : செப் 11, 2025 01:29 AM

Google News

ADDED : செப் 11, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகரில், 'காப்பர்' ஒயர் திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.

மறைமலை நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஜி.எஸ்.டி., சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கிய போது, அதில் இருவர் தப்பிச் சென்றனர்.

ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 'காப்பர்' ஒயர்கள் சிக்கின.

இதையடுத்து, அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் பிடிபட்ட நபர், காட்டாங்கொளத்துார் அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம்,27, என தெரிந்தது.

இவர் மீது, மறைமலை நகர் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து ஸ்ரீ ராமை, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடமிருந்து, 20 கிலோ காப்பர் ஒயர்களை பறிமுதல் செய்தனர். தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us