/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்வாயில் விழுந்த பசு மாடுகள் மீட்பு
/
கால்வாயில் விழுந்த பசு மாடுகள் மீட்பு
ADDED : அக் 25, 2025 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்: கால்வாயில் விழுந்த இரண்டு பசு மாடுகள் மீட்கப்பட்டன.
திருப்போரூர் அடுத்த சிறுசேரி சிப்காட் அருகே இரண்டு பசு மாடுகள், நேற்று காலை மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது இரண்டு மாடுகளும் தவறி, அங்குள்ள 3 அடி ஆழ மழைநீர் கால்வாயில் விழுந்தன. மேலே ஏற முடியாமல் தவித்தன.
அருகில் இருந்தவர்கள் சிறுசேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மாடுகளின் கொம்பில் கயிறு கட்டி, மெதுவாக இழுத்து, இரண்டு மாடுகளையும் உயிருடன் மீட்டனர்.

