sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சைக்ளோத்தான் போட்டி வீரர்கள் ஆர்வம்

/

சைக்ளோத்தான் போட்டி வீரர்கள் ஆர்வம்

சைக்ளோத்தான் போட்டி வீரர்கள் ஆர்வம்

சைக்ளோத்தான் போட்டி வீரர்கள் ஆர்வம்


ADDED : செப் 22, 2025 12:46 AM

Google News

ADDED : செப் 22, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:கானத்துார் - மாமல்லபுரம் இடையே, சைக்ளோத்தான் போட்டி நேற்று நடந்தது. சைக்கிளிங் வீரர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்தனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ெஹச்.சி.எல்., தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து, கானத்துார் - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையில், சென்னை சைக்ளோத்தான் - 2025 போட்டியை, நேற்று நடத்தின.

இப்போட்டி, சென்னை அடுத்த, கானத்துார் பகுதியில் துவங்கி, மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி பகுதி வரை, புரொபஷனல் சைக்கிளிங் போட்டியாக நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற இந்திய, ஆசிய நாட்டு வீரர்கள், வீராங்கணைகள் 50 கி.மீ.,க்கு, நவீன சைக்கிளில் பயணித்தனர்.

மேலும், அமெச்சூர் சைக்கிளிங் உள்ளிட்ட பிற போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியை நடத்துவதற்காக, அக்கரை - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று காலை ஐந்து மணி நேரம், வாகனங்களுக்கு தடைசெய்யப்பட்டு பழைய மாமல்லபுரம் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us