sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையில் மரண பள்ளங்கள் அனுமந்தபுரத்தில் அச்சம்

/

சாலையில் மரண பள்ளங்கள் அனுமந்தபுரத்தில் அச்சம்

சாலையில் மரண பள்ளங்கள் அனுமந்தபுரத்தில் அச்சம்

சாலையில் மரண பள்ளங்கள் அனுமந்தபுரத்தில் அச்சம்


ADDED : பிப் 03, 2025 11:47 PM

Google News

ADDED : பிப் 03, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலையை தென்மேல்பாக்கம், அஞ்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.

இச்சாலையில் தென்மேல்பாக்கம், கொண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.

இந்த பள்ளங்களால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

பல ஆண்டுகளாக இந்த பள்ளங்கள் சரி செய்யப்படாமல் உள்ளன. அவ்வப்போது பள்ளங்களில் ஜல்லி கற்கள் மட்டுமே கொட்டப்படுகின்றன. இதனால் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன.

தென்மேல்பாக்கம் அருகிலும் சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களால், சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில், காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் உயிரிழந்தார்.

எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us