sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை புறநகரில் விளம்பரங்களை அழிக்கும் பணி மந்தம்

/

செங்கை புறநகரில் விளம்பரங்களை அழிக்கும் பணி மந்தம்

செங்கை புறநகரில் விளம்பரங்களை அழிக்கும் பணி மந்தம்

செங்கை புறநகரில் விளம்பரங்களை அழிக்கும் பணி மந்தம்


ADDED : மார் 19, 2024 03:50 AM

Google News

ADDED : மார் 19, 2024 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: நாட்டின் 18வது லோக்சபா நடத்தை விதிமுறைகள், கடந்த 16ம் தேதி அமலுக்கு வந்தது.

இதையடுத்து, போலீசார் செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலை, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லை துவங்கும் பகுதியில், மறைமலை நகர் போலீசார் வாகனங்களை நிறுத்தி, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கை புறநகர் பகுதிகளான பரனுார், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. செங்கல்பட்டு பகுதியில் உள்ள அண்ணாதுரை, ராஜிவ்காந்தி சிலைகள், நகரின் பல பகுதிகளில் உள்ள ஆளும் கட்சி தோரணங்கள் உள்ளிட்டவை அகற்றப்படாமல் உள்ளன.

பரனுார் ரயில்வே மேம்பாலம், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்ல சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றில், தி.மு.க.,வின் சுவர் விளம்பரங்கள் மறைக்கப்படாமல் இருந்தன.

பல இடங்களில், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டு உள்ள கட்சி கொடிகள் அகற்றப்படாமல் உள்ளன. பல ஊராட்சிகளில், தேர்தல் நடத்தை விதிகளை யாரும் கண்டுகொள்ளவில்லை.

சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காமராஜர், காந்தி, எம்.ஜி.ஆர்., சிலைகள் பிளாஸ்டிக் கோணிகள் வாயிலாக மூடப்பட்டு உள்ளன.

ஆனால், அதே பகுதியில் எதிர் திசையில் தி.மு.க.,வின் கட்சி கொடி, பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன.






      Dinamalar
      Follow us