நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, மதுராந்தகத்தில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பா.ஜ., செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 200க்கும் மேற்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

