sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் அரசு பஸ் மோதி டாக்டர் பலி; 18 பேர் காயம்

/

செங்கையில் அரசு பஸ் மோதி டாக்டர் பலி; 18 பேர் காயம்

செங்கையில் அரசு பஸ் மோதி டாக்டர் பலி; 18 பேர் காயம்

செங்கையில் அரசு பஸ் மோதி டாக்டர் பலி; 18 பேர் காயம்


ADDED : ஆக 19, 2025 12:16 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், அரசு பேருந்து மோதி, மருத்துவர் பலியானார்; 18 பேர் காயமடைந்தனர்.

கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று காலை, விழுப்புரம் போக்குவரத்து கழக அரசு பேருந்து ஒன்று வந்தது. செங்கல்பட்டு ராட்டின கிணறு ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, அங்கு காத்திருந்த 18 பயணியர் மற்றும் சாலையைக் கடக்க காத்திருந்த இரு மருத்துவர்கள் மீது மோதியதுடன், செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மீதும் மோதியது.

இதில், அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிக்குமார், 46, என்ற குழந்தைகள் நல மருத்துவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பணியாற்றி வந்தார்.

காயமடைந்த மற்றொரு மருத்துவர் பிரவீன்குமார் மற்றும் பயணியரை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிகுமார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் சுப்பிரமணியன் அஞ்சலி

செங்கல்பட்டில், பேருந்து மோதி உயிரிழந்த மருத்துவர் மணிக்குமார் உடலுக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார். அதன் பின், படுகாயமடைந்தவர்களையும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். செங்கல்பட்டு தி.மு.க.,- - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கலெக்டர் சினேகா, மருத்துவமனை முதல்வர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.








      Dinamalar
      Follow us