sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் 17 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

/

செங்கையில் 17 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செங்கையில் 17 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செங்கையில் 17 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


ADDED : ஜூன் 04, 2025 10:05 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், 17 வார்டுகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குண்டூர், அனுமந்தபுத்தேரி பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது.

இத்திட்டம், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தை மற்ற பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், நகரவாசிகள் வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து, 17 வார்டுகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இத்திட்டத்தை செயல்படுத்த, ஆழ்துளை கிணறு மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த, நகராட்சி பொது நிதி மற்றும் குடிநீர் நிதி என, 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகரமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இப்பணிகளை செயல்படுத்த, டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us