sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ஏகாம்பரநாதர் கோவில் யாகசாலை மண்டப பணி

/

 ஏகாம்பரநாதர் கோவில் யாகசாலை மண்டப பணி

 ஏகாம்பரநாதர் கோவில் யாகசாலை மண்டப பணி

 ஏகாம்பரநாதர் கோவில் யாகசாலை மண்டப பணி


ADDED : நவ 19, 2025 05:10 AM

Google News

ADDED : நவ 19, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம் டிச.,8ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மஹா கும்பாபிஷேகம் டிச.,8ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருப்பணிகள் இரவு, பகலாக தீவிரமாக நடந்து வருகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் சிவகங்கை தீர்த்தக்குளம் அருகில் யாகசாலை பூஜைக்கான மண்டபம் அமைக்கும் பணி துவக்கபட்டுள்ளது. இதில், 70 ஹோமகுண்டங்களுக்கான யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் இணைந்து யாகசாலை பூஜையை நடத்துகின்றனர். இதில், 160 சிவாச்சாரியார்கள், 160 வேத விற்பன்னர்கள், 30க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் பங்கேற் கின்றனர். டிச.,4ல் யாக சாலை பூஜைகள் துவங்குகிறது.

டிச.,8ம் தேதி, காலை 5.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகமும், 6:30 மணிக்கு மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகமும், தொடர்ந்து மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us