/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ-வீலரில் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
/
டூ-வீலரில் வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
ADDED : டிச 30, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்: மானாமதி அடுத்த அருங்குன்றத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 51. நேற்று பகல் 1:30 மணியளவில், 'ஸ்பிளெண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் மானாமதி நோக்கி, எச்சூர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.
அவரது வாகனத்திற்கு பின்னால் சென்ற, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமல்லபுரம் போலீசார் அவரது உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விபத்து குறித்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

