sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மாடு முட்டி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு

/

 மாடு முட்டி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு

 மாடு முட்டி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு

 மாடு முட்டி காயமடைந்த முதியவர் உயிரிழப்பு


ADDED : நவ 27, 2025 04:26 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மாடு முட்டி காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, மாதவரம் அடுத்த மாத்துார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த் சைன், 79. இவர், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் வினியோகித்து வந்தார்.

இவர், கடந்த 14ம் தேதி சைக்கிளில் பால் போடும் பணியில் இருந்தார். மாத்துார் பிரதான சாலையில் சென்றபோது, ஒரு பசு மாடு, குதிரையுடன் உணவிற்காக தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளது.

திடீரென மிரண்டு ஓடிய பசு மாடு முதியவர் ஆனந்த் சைன் மீது மோதியது. இதில் கீழே விழுந்த முதியவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி, முதியவர் நேற்று முன்தினம் மரணடைந்தார். இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலையில் உலா வரும் மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் அதன் உரிமையாளர் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இருப்பதே இந்த உயிர்பலி சம்பவத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us