/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்
/
செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்
செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்
செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள்
ADDED : அக் 14, 2025 12:37 AM
சென்னை, பயணியர் வசதிக்காக, செங்கல்பட்டு - கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையொட்டி, செங்கல்பட்டு - திருநெல்வேலிக்கு வரும் 17 முதல் 26ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதனால், பயணியர் வந்து செல்ல வசதியாக, செங்கல்பட்டு - கடற்கரை இடையே மின்சார சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு - கடற்கரைக்கு மதியம் 1:45, 2:20 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல், கடற்கரை - செங்கல்பட்டு பகல் 12:40, மதியம் 1:00 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
குருவாயூர் ரயில்கள்
சேவையில் மாற்றம்
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, குருவாயூர் விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம், திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில், இந்த மாதம் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. l கேரள மாநிலம் குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி விரைவு ரயில், வரும் 17, 22, 24ம் தேதிகளில், கோட்டயம் வழியாக மாற்றுப்பாதையில் செல்வதால், எர்ணாகுளம், ஆலப்புழா வழியாக செல்லாது l எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில், வரும் 30, நவ., 3ம் தேதிகளில், மாற்றுப்பாதையில் செல்வதால், 85 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும் l எழும்பூர் - குருவாயூர் காலை 10:20 மணி விரைவு ரயில், வரும் நவ., 1ம் தேதி மாற்றுப்பாதையில் செல்வதால், 50 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.