sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகள் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

/

காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகள் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகள் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகள் குவிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு


ADDED : ஆக 16, 2025 12:12 AM

Google News

ADDED : ஆக 16, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:காப்புக்காடுகளில் மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கோவிந்தாபுரம் - கொண்டமங்கலம் செல்லும் சாலை, 3.3 கி.மீ., துாரம் உடையது. இது திருப்போரூர் - சிங்கபெருமாள் கோவில் சாலையின் இணைப்பு சாலை.

இந்த சாலையின் இருபுறமும் கருநிலம், கோவிந்தாபுரம், கொண்டமங்கலம் கிராமங்களின் காப்புக் காடுகள் உள்ளன.

இந்த காப்புக் காடுகள் மற்றும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பையை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

இந்த சாலையின் இருபுறமும் அடர்ந்த காப்புக்காடுகள் உள்ளன.

இதில் தொழிற்சாலை கழிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கொண்டுவரப்படும் கழிவுநீர் உள்ளிட்டவை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.

தற்போது மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி உள்ளதால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us