sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

/

 கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

 கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு

 கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட எதிர்பார்ப்பு


ADDED : டிச 15, 2025 05:52 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்போரூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம் ஊராட்சி அமைந்துள்ளது.

இங்கு நீலக்கடற்கரை, மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா, விடுதிகள், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், வங்கி உள்ளிட்டவை உள்ளன.

மேலும், கோவளம் அருகே முட்டுக்காடு படகு குழாம், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன.

இதன் காரணமாக, அனைத்து தரப்பு மக்களும், சுற்றுலா பயணியரும் தினமும் கோவளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

அவசர தேவையின் போது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கென சிறுசேரி, திருப்போரூர், மாமல்லபுரத்திலிருந்து வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டிய சூழல் இருந்தது.

இதற்கு தீர்வு காண, கோவளத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை கடந்த 2024 ஜூன் மாதம் வெளியிட்டார்.

இதற்காக, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம், கோவளம் நுாலகம் வளாகத்தில் தற்காலிக கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு நிலைய அலுவலர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

ஆனால், போதிய இடவசதி இல்லாமல் அனைவருமே சிரமப்படுகின்றனர். தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி எடுப்பதற்கான கட்டட வசதியும் இல்லை.

எனவே, கோவளம் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us