sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சுற்றுலா விடுதியில் சீரழிந்துள்ள கருத்தரங்க கூடத்தால் முகம் சுளிப்பு

/

சுற்றுலா விடுதியில் சீரழிந்துள்ள கருத்தரங்க கூடத்தால் முகம் சுளிப்பு

சுற்றுலா விடுதியில் சீரழிந்துள்ள கருத்தரங்க கூடத்தால் முகம் சுளிப்பு

சுற்றுலா விடுதியில் சீரழிந்துள்ள கருத்தரங்க கூடத்தால் முகம் சுளிப்பு


ADDED : பிப் 08, 2025 11:53 PM

Google News

ADDED : பிப் 08, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில், பயணியர் முகம் சுளிக்கும் வகையில் உள்ள சீரழிந்த கருத்தரங்க கூடத்தை, அகற்ற வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், சுற்றுலா பயணியர் தங்கும் கடற்கரை விடுதி இயங்குகிறது.

இங்கு பயணியர் தங்குவது ஒருபுறமிருக்க, விடுதி வளாகத்தில் விழா, கருத்தரங்கம், திருமணம் ஆகியவையும் நடத்தப்படுகின்றன.

துவக்கத்தில் அமைக்கப்பட்ட சாதாரண சிறிய கருத்தரங்க கூடம், நாளடைவில் பயன்பாட்டு தேவைக்கேற்ப இல்லை.

எனவே, புதிய கருத்தரங்க கூடம் அமைக்க முடிவெடுத்த நிர்வாகம், அரசிடமும் இதுகுறித்து பரிந்துரைத்தது.

இதை பரிசீலித்த அரசு, புது கருத்தரங்க கூடம் அமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஆசிய வளர்ச்சி வங்கிக் கடன், ஒரு கோடி ரூபாயில், புதிய கருத்தரங்க கூடம், கடந்த 2017ல் அமைக்கப்பட்டது.

கடற்கரை பகுதியில் கட்டுமான தடை உள்ளதால், கட்டுமானமாக இல்லாமல், இரும்பு துாண்கள் கட்டமைப்பு ஏற்படுத்தி தரைதளம், மேல்தளம் என, தலா 3,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டது.

தரை தளத்தில் வரவேற்பறை, குடி மையம்; மேல்தளத்தில், கருத்தரங்க கூடம் இயங்கியது.

அரங்கிலிருந்து கடற்கரை சூழலை ரசிப்பதற்கேற்ப, சுவர் இல்லாமல் கண்ணாடி தடுப்புடன் அமைக்கப்பட்டது.

சில ஆண்டுகள் மட்டுமே பயன்பட்டு, நாளடைவில் பாழடைந்தது.

தற்போது, பயணியர் அறைகளை ஒட்டி, சீரழிந்து உருக்குலைந்துள்ள இந்த அரங்கம், சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

எனவே, இந்த சீரழிந்த கருத்தரங்க கூடத்தை அகற்ற வேண்டுமென பயணியர் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us