/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நில விபரங்கள் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
நில விபரங்கள் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 21, 2025 06:50 PM
செங்கல்பட்டு:விவசாயிகள் நில உடமை திட்டத்தில், நில விபரங்கள் பதிவு செய்ய வேண்டும் என, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுகின்றனர். இத்திட்டத்தைபெற, தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்பிக்க வேண்டும்.
இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், விவசாயிகள் நில உடைமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, விவசாயிகள் பதிவு விவரங்களுடன் ஆதார் எண், மொபைல் போன் எண் மற்றும் நில உடைமை விவரங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் பொது இ-சேவை மையம் சென்று அங்கு நில உடையை விவரங்கள் இணைக்கப்பட்ட பின் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஏற்படுத்தப்படும்.
நடப்பாண்டு முதல் பி.எம்.கிஷான் பயிர் காப்பீடு திட்டம் போன்ற அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பெயன்பெற, தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம்.
விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண் துறை வாயிலாக நடத்தப்படும் முகாம் மற்றும் இ- சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்களது விபரங்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.