/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
21ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : பிப் 19, 2025 06:22 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், 21ம் தேதி, நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 21ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறபட்டுள்ளது.

