sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை அருகே விபத்தில் தீயணைப்பு வீரர் பலி

/

செங்கை அருகே விபத்தில் தீயணைப்பு வீரர் பலி

செங்கை அருகே விபத்தில் தீயணைப்பு வீரர் பலி

செங்கை அருகே விபத்தில் தீயணைப்பு வீரர் பலி


ADDED : ஜூலை 07, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில், தீயணைப்பு வீரர் பலியானர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் அடுத்த சத்ரபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு, 38; அலங்காநல்லுார் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்தார்.

இவருக்கு, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு சமீபத்தில் பணி மாறுதல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை பிரபு, மதுரையில் இருந்து, தன் 'ஹோண்டா யூனிகார்ன்' பைக்கில், சென்னை நோக்கி வந்தார்.

நேற்று இரவு, செங்கல்பட்டு அடுத்த பழவேலி அருகில், ஜி.எஸ்.டி., சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பைக்க, சாலையோரம் இருந்த தரைப்பாலத்தில் மோதியது.

இதில் பிரபு துாக்கி வீசப்பட்ட போது, அணிந்திருந்த ஹெல்மெட் கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், பிரபு உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us