தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சூதாடிய ஐவர் சிக்கினர் பணம் பறிமுதல்

 சூதாடிய ஐவர் சிக்கினர் பணம் பறிமுதல்

 சூதாடிய ஐவர் சிக்கினர் பணம் பறிமுதல்


ADDED : ஜூலை 06, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 03:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்கபெருமாள் கோவில்: கருநிலம் கிராமத்தில், சீட்டு வைத்து சூதாடிய ஐந்து பேரை பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை, சிங்கபெருமாள் கோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கருநிலம் ஏரிக்கரை பகுதியில், சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய ஐந்து பேரை, போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த நாகராஜன், 55, வினோத், 36, புண்ணியகோட்டி, 40, லோகநாதன், 40, கணேஷ், 49, என்பது தெரியவந்தது.

இவர்கள் மீது சூதாட்ட வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பின் ஜாமினில் விடுதலை செய்தனர். அவர்களிடம் இருந்து, 20,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us