/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு பதவி உயர்வு
/
முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு பதவி உயர்வு
முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு பதவி உயர்வு
முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு பதவி உயர்வு
ADDED : ஏப் 10, 2025 08:06 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நான்கு பேருக்கு, துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், சப் - கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில், முதல் நிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பதவி உயர்வு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, 20 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு, தற்காலிகமாக துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கடந்தாண்டு டிச., 3ம் தேதி, கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், முதுநிலை வருவாய் ஆய்வாளகள் நான்கு பேருக்கு, தற்காலிகமாக துணை தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கியும், துணை தாசில்தார்கள் நான்கு பேரை பணியிட மாற்றம் செய்தும், கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.