sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்

/

பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்

பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்

பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்து: வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : செப் 10, 2025 02:03 AM

Google News

ADDED : செப் 10, 2025 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் விபத்துகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர்.

திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.

இந்த சாலையில் கூடுவாஞ்சேரி - மகேந்திரா சிட்டி வரை எட்டு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

தற்போது பணிகள் நிறைவடைந்து, வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில் பேரமனுார் சாலை சந்திப்பை கடந்து பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் சிப்காட் பகுதிக்கு இந்த வழியாக கனரக வாகனங்களும் செல்கின்றன. இந்நிலையில், இந்த சந்திப்பில் கடந்த எட்டு மாதங்களில் 20க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்று உள்ளன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது முதல் அனைத்துசந்திப்புகளிலும் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. 100 அடி அகலமான சாலை என்பதால் முதியவர்கள், பெண்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

இங்கு போக்குவரத்து போலீசார் பெரும்பாலும் பணியில் இல்லாதது, விபத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us