ADDED : ஏப் 13, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:கருங்குழி ராகவேந்திரா சுவாமி கோவிலில் பவுர்ணமி விழா நடந்தது.
மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் பங்குனி மாத பவுர்ணமி விழா விமரிசையாக நடந்தது.
ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு, மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.