/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல உத்தரவு
/
செங்கை கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல உத்தரவு
செங்கை கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல உத்தரவு
செங்கை கலெக்டர் அலுவலக நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல உத்தரவு
ADDED : ஏப் 07, 2025 12:01 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல, காஞ்சிபுரம் மண்டல பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத் துறை, மகளிர் திட்டம், வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு, அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தேவைக்கு, பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மலையடி வேண்பாக்கம் ஐ.டி.ஐ., பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்கின்றன.
இங்கிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் நடந்து செல்கின்றனர்.
இதேபோன்று, பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போதும், மேற்கண்ட நிறுத்தத்திற்கு வந்து, பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இதனால், அரசு பெண் ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக, காஞ்சிபுரம் மண்டல மேலாளருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பாக இயக்கப்படும் அனைத்து மண்டல பேருந்துகளும், கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில், கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரையும், ஏற்றியும், இறக்கியும் விட வேண்டும்.
செங்கல்பட்டு கிளை மேலாளர், உதவி பொறியாளர் ஆகியோர் காலை, மாலை நேரங்களில், தனி கவனம் செலுத்த வேண்டும் என, பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.