sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறுவை நெல் சாகுபடிக்கு முதல்முறை 5,000 விவசாயிகளுக்கு அரசு மானியம்

/

குறுவை நெல் சாகுபடிக்கு முதல்முறை 5,000 விவசாயிகளுக்கு அரசு மானியம்

குறுவை நெல் சாகுபடிக்கு முதல்முறை 5,000 விவசாயிகளுக்கு அரசு மானியம்

குறுவை நெல் சாகுபடிக்கு முதல்முறை 5,000 விவசாயிகளுக்கு அரசு மானியம்


ADDED : ஜூன் 04, 2025 01:16 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், குறுவை சாகுபடி தொகுப்புக்கு முதல் முறையாக, 5,000 விவசாயிகளுக்கு, தமிழக அரசு மானியம் வழங்க உள்ளது. இதனால், சொர்ணவாரி பருவத்தில், நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டு, சொர்ணவாரி பருவ நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு, 34,000 ஏக்கர் பரப்பில், நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு, டெல்டா மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள குறுவை தொகுப்பு சிறப்பு மானிய திட்டத்தை, டெல்டா அல்லாத பிற மாவட்டங்களிலும் நடப்பாண்டு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் பரப்பில் இயந்திர நடவு மேற்கொள்ள, 4,000 ரூபாய் நடவு மானியம் வழங்கப்படும். இது தவிர நெல் விதைகள், நெல் நுண்ணுாட்ட கலவைகள் மற்றும் உயிர் உரங்கள் ஆகியவை, 50 சதவீத மானியத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு, குறுவை தொகுப்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 5,000 ஏக்கர் பரப்பிற்கு, 2 கோடி ரூபாய் நிதி வழங்கி, அரசு உத்தரவிட்டது.

இதனால், சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்யும் 5,000 விவசாயிகள் பயனடையலாம். முதலில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு எண், குடும்ப அட்டை எண் ஆகிய விபரங்களுடன், உழவர் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும், உழவர் செயலியில் முன்பதிவு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு, தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

நடப்பாண்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறுவை தொகுப்பு அரசு மானியத்தை, மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறுவை தொகுப்பு மானியம்


வட்டாரம் ஏக்கர்
அச்சிறுபாக்கம் 500
மதுராந்தகம் 1,100
சித்தாமூர் 400
பவுஞ்சூர் 700
திருக்கழுக்குன்றம் 1,500
திருப்போரூர் 450
காட்டாங்கொளத்துார் 300
சிட்லப்பாக்கம் 50
மொத்தம் 5,000








      Dinamalar
      Follow us