/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்க்கும் கூட்டம் 321 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்க்கும் கூட்டம் 321 மனுக்கள் ஏற்பு
ADDED : மே 20, 2025 12:40 AM
செங்கல்பட்டு, செங்கல்பட்டில், வாராந்திர மக்கள் குறைதீக்கும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 231 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன், காஜா சாகுல் அமீது, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், உதவி ஆணையர் ராஜன்பாபு உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், புதிய ரேஷன் கார்டு, வீட்டிற்கு மின் இணைப்பு, மின் அழுத்த குறைபாடு.
தொழில் துவங்க வங்கி கடன், திருநங்கையருக்கு வீடு, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 321 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.