/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு 31ல் குறைதீர்வு கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு 31ல் குறைதீர்வு கூட்டம்
ADDED : ஜன 29, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், வரும் 31ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை நகலுடன், தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.