sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் அரசு மருத்துவமனை புது கட்டடத்திற்கு பூமி பூஜை

/

செய்யூர் அரசு மருத்துவமனை புது கட்டடத்திற்கு பூமி பூஜை

செய்யூர் அரசு மருத்துவமனை புது கட்டடத்திற்கு பூமி பூஜை

செய்யூர் அரசு மருத்துவமனை புது கட்டடத்திற்கு பூமி பூஜை


ADDED : மார் 20, 2025 09:10 PM

Google News

ADDED : மார் 20, 2025 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில், அரசு பொது மருத்துவமனை உள்ளது.

தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, புத்துார், அம்மனுார், கீழச்சேரி என, 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது.

புறநோயாளிகள், மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சை என, தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மருத்துவமனையில் பல கட்டடங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, நாளடைவில் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன.

பழைய கட்டடங்களை அகற்றி, மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் 3.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பொதுப்பணித் துறை மூலமாக பழைய கட்டடங்களை அகற்றி, இரண்டு தளங்களுடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை கட்டடம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில், புதிய கட்டடம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

இதில், செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

விழாவில் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், செய்யூர் வட்டாட்சியர் சரவணன், லத்துார் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us