sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்காடு - திருப்போரூர் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம் வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

செங்காடு - திருப்போரூர் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம் வாகன ஓட்டிகள் கோரிக்கை

செங்காடு - திருப்போரூர் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம் வாகன ஓட்டிகள் கோரிக்கை

செங்காடு - திருப்போரூர் சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அவசியம் வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : அக் 06, 2025 11:26 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்,செங்காடு - திருப்போரூர் சாலை சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூரிலிருந்து செங்காடு செல்லும் சாலை, 3 கி.மீ., துாரம் கொண்டது. இதில், 1 கி.மீ., சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த இடத்தில் சாலை சேதமடைந்து, மோசமான நிலையில் இருந்தது.

இச்சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து சமீபத்தில், வனத்துறை அனுமதி பெற்று மேற்கண்ட சாலை, 52.91 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த சாலையின் வழியாக, மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கோமா நகர், தையூர், காயார் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு மக்கள் செல்கின்றனர்.

மேற்கண்ட சாலை சந்திப்பில், மின் விளக்கு இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, செங்காடு - திருப்போரூர் சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us