sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 26, 2025 ,புரட்டாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

/

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : மே 20, 2025 08:57 PM

Google News

ADDED : மே 20, 2025 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டத்தின், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, படாளத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.

செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் துவக்கி வைத்தார்.

பிளஸ் - 2 முடித்த மாணவ, மாணவியர் உயர் கல்விக்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சியில், மதுராந்தகம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட லத்துார், சித்தாமூர், அச்சிறுபாக்கம், மதுராந்தகம் ஒன்றியங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த கல்விகளில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் கல்லுாரிகளை தேர்ந்தெடுத்தல், விண்ணப்பம் செய்தல் குறித்து, துறை சார்ந்த வல்லுனர்கள் எடுத்துரைத்தனர்.

பின், பிளஸ் - 2 வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம், மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் அங்கயர்கண்ணி, நேர்முக உதவியாளர் உதயகுமார், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த வல்லுனர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us