/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு பூட்டை உடைத்து நகை திருட்டு
/
வீடு பூட்டை உடைத்து நகை திருட்டு
ADDED : ஜன 29, 2025 08:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் மீனா,50.
நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, நுாறு நாள் பணிக்குச் சென்றுள்ளார்.
பணி முடிந்து, மதியம் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 2.5 சவரன் தங்க நகைகள், 200 கிராம் வெள்ளி கொலுசு, 20,000 ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து மீனாட்சி, மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.