sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு

/

ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு

ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு

ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாதிப்பு


ADDED : மார் 17, 2025 01:19 AM

Google News

ADDED : மார் 17, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் சிப்காட் அண்ணா சாலையில், வாகனங்கள் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு தன்மை கொண்ட ரசாயன கழிவுநீர், மழைநீர் வடிகால்வாய் வழியாக மறைமலைநகர் நின்னகரை ஏரியில், சுத்திகரிப்பு செய்யப்படாமல் விடப்படுவதாக, பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

அண்ணா சாலையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர், அண்ணாசாலை, கம்பர் தெருவில் உள்ள கால்வாய் வழியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஏரியில் நேரடியாக கலக்கிறது.

தொழிற்சாலைகளில் பெயரளவிற்கு மட்டுமே சுத்திகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவுநீர் வாயிலாக, நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஏரியில் கிணறு அமைத்து, இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால், பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, ரசாயன கழிவுநீரை நீர்நிலைகளில் விடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us