sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகளை திறக்க வலியுறுத்தல்

/

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகளை திறக்க வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகளை திறக்க வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கடைகளை திறக்க வலியுறுத்தல்


ADDED : மார் 02, 2024 12:02 AM

Google News

ADDED : மார் 02, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலைய வளாகத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை, பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பாகவே ஏலம் விடப்பட்டு, ஏலத்தில் எடுத்து உரிய முன்வைப்பு தொகை செலுத்தியவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில், சில கடைகள் மட்டுமே தற்போது திறக்கப்பட்டுள்ளன. மற்ற கடைகள் திறக்கப்படாததால், பயணியர் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட சிரமப்படுகின்றனர்.

இது குறித்து, உள்ளூர் வணிகர்கள் கூறியதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடையை திறந்து நடத்தாமல், அதிக முன்வைப்பு தொகை மற்றும் அதிக வாடகைக்கு உள்ளூர் வணிகர்களிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் கேட்கும் பெருந்தொகை வாடகை கொடுத்து, கடையை நடத்த முடியுமா என்ற அச்சத்தில், உள்ளூர் வணிகர்கள் கடை எடுப்பதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், ஏற்கனவே ஏலத்தில் கடைகளை எடுத்தவர்கள், கடையை திறக்காமல் வைத்துள்ளனர்.

எனவே, கடைகள் உரிமம் பெற்றும், இன்னும் திறக்காமல் இருக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, உள்ளூர் வணிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து கடைகளையும் திறக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us