/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொட்டமேடு 4 முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
/
கொட்டமேடு 4 முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
கொட்டமேடு 4 முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
கொட்டமேடு 4 முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 16, 2024 01:14 AM

திருப்போரூர்:திருப்போரூர் -- செங்கல்பட்டு இடையே, கொட்டமேடு சந்திப்பு உள்ளது. இங்கிருந்து, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, திருப்போரூர், மானாமதி என, நான்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன.
பல்வேறு கிராமங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக, இந்த சாலை உள்ளது. கடந்தாண்டு, திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ததால், 200 அடி அகலமாக மாறியது.
நான்கு புறங்களிலும் தாறுமாறாக வாகன ஓட்டிகள் திரும்பி செல்கின்றனர். மேலும், கொட்டமேட்டில் சாலை ஓரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு, மதுப்பிரியர்களும் அதிக அளவில் வருகின்றனர்.
எனவே, அப்பகுதியில் விபத்தை தவிர்க்க, கொட்டமேடு நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், அப்பகுதிவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

